உன் வீட்டிற்குள் அனுமதிக்க
தடை போடுகிறது
உன் சாதிப் படிக்கல்.
தாகத்திற்கு நீர் கேட்டபோது
தனிக்குவளையில் தந்து
மனிதத்தை அவமானப்படுத்தி
உன் சாதியைப் பெருமைப்படுத்தினாய்
எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட
எங்களின் கடவுள்களைக் காண
தடை விதித்ததில்
உன் சாதித் திருட்டுத்தனம்
ஒளிந்து கொண்டிருக்கிறது
உன் வீதியில்
நடந்து செல்ல
கட்டுப்பாடுகள் விதித்து
கௌரவப்படுத்தினாய்
உன் சாதியை.
என் சகோதரன் சொன்ன நியாயம்
குற்றமெனக் கூறி
வாயில் மலம் திணிக்கச் செய்தது
உன் சாதித் திமிர்
வெறி கொண்ட ஆதிக்கத்தால்
எங்களின் இருப்புகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை உன்னால்
அரவமற்ற வேளையில்
புணர்வதற்காக
என்னை அழைக்கையில்
எங்கடா போச்சு உன்
சாதி
இதற்கு மட்டும்
சாதியில்லையா..
(சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய வரிகள், இப்போதுதான் பதிவிடுகிறேன்)
தடை போடுகிறது
உன் சாதிப் படிக்கல்.
தாகத்திற்கு நீர் கேட்டபோது
தனிக்குவளையில் தந்து
மனிதத்தை அவமானப்படுத்தி
உன் சாதியைப் பெருமைப்படுத்தினாய்
எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட
எங்களின் கடவுள்களைக் காண
தடை விதித்ததில்
உன் சாதித் திருட்டுத்தனம்
ஒளிந்து கொண்டிருக்கிறது
உன் வீதியில்
நடந்து செல்ல
கட்டுப்பாடுகள் விதித்து
கௌரவப்படுத்தினாய்
உன் சாதியை.
என் சகோதரன் சொன்ன நியாயம்
குற்றமெனக் கூறி
வாயில் மலம் திணிக்கச் செய்தது
உன் சாதித் திமிர்
வெறி கொண்ட ஆதிக்கத்தால்
எங்களின் இருப்புகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை உன்னால்
அரவமற்ற வேளையில்
புணர்வதற்காக
என்னை அழைக்கையில்
எங்கடா போச்சு உன்
சாதி
இதற்கு மட்டும்
சாதியில்லையா..
(சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய வரிகள், இப்போதுதான் பதிவிடுகிறேன்)

